பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!
இலங்கைசெய்திகள்

பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!

Share

பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!

மட்டக்களப்பில் பெண்கள் குளிப்பதை Drone கமரா மூலம் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காணொளி எடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் ஆளும் நாடளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் இவ்வாறான கேவலமான செயலில் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் பார்வையிட்டார்.

அங்குள்ளவர்களே கீரியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயலை இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் என சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்று சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார்.

அந்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் , வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக இறால், மீன்களைப் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கியவர்கள் அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேலையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்ககூடாது என்று பதாதை இடப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமின்றி சிசிரிவி கமரா மற்றும் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி வீடியோக்கள் எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆற்றினை மறைத்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிரிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு செயற்பாட்டை உலகத்திலேயே யாரும் செய்யவில்லை என்றும் இது போன்ற மோசமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுகின்றதாகவும் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...