யாழ் நிலா தொடருந்து
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

Share

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா‘ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளயது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.

தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

‘யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...