யாழ் நிலா தொடருந்து
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

Share

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா‘ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளயது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.

தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

‘யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...