இலங்கை

யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

Published

on

யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

யாழ். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.07.2023) இரவு இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 கைது கடற்தொழிலாளர்களை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version