இலங்கையில் நிரந்தரமாக மூடப்படும் நோர்வே தூதரகம்
நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதியில் இருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள தனது பணிகளில் பல மாற்றங்களைச் செய்வதாகவும், கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரங்களை மூடுவதாகவும் கடந்த ஆண்டு நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.