rtjy 267 scaled
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய பாடகரால் இசை நிகழ்ச்சியில் குழப்பம்

Share

சர்ச்சைக்குரிய பாடகரால் இசை நிகழ்ச்சியில் குழப்பம்

கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை கச்சேரியில் இருந்து பிரபல பாடகர்கள் விலகியதை அடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகர் ஒருவரும் குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நிலையிலேயே, பிரபல பாடகர்கள் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டனர்.

சர்ச்சைக்குரிய குறித்த பாடகர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் மற்றும் இசை காணொளிகளையும் வெளியிட்டிருந்தார்.

அவரது சில இசை காணொளிகளின் உள்ளடக்கம் மூலம் திருநங்கைகளை கேலி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கையின் மிகவும் பிரபலமான இரண்டு இளம் பாடகர்களும் தமது நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

அதில், அசல் ஒப்பந்தத்திற்கு மாறாக கச்சேரியை நடத்த முயன்றதன் காரணமாகவே தாம் அதிலிருந்து விலகிக்கொண்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...