உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு

Share

உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு

மன்னார் – இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக, விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் ஒருவரை, அவரது நண்பர்கள் இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு படுகாயமடைந்த நபருக்கு எவ்வித முதலுதவியும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு படுகாயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். இவ்வாறு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் போது படுகாயமடைந்த நபர் உயிருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலுப்பக்குளம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியாசலைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது ஈச்சங்குளம் பகுதியில் வைத்து விபத்திற்குள்ளான நபரின் உயிர் பிரிந்துள்ளது.

சரியான நேரத்திற்கு இலுப்பக்குளம் வைத்தியசாலைக்குச் சென்றும் வைத்தியசாலையில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கினால் இந்த உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரணை இழுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டியும் பாவனைக்கு உகந்த வகையில் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக படுகாயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...