rtjy 250 scaled
இலங்கைசெய்திகள்

வடமாகாண கலைஞர்கள் ஒன்றிணைந்து பண்பாட்டு பேரவை உருவாக்கம்

Share

வடமாகாண கலைஞர்கள் ஒன்றிணைந்து பண்பாட்டு பேரவை உருவாக்கம்

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்று (22/07/2023) வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கவிஞரும், பாடல் ஆசிரியருமான யாழ் மருதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நடனம் வாழ்த்துரைகள், பாடல்கள் கவிதைகள் என்பன இடம்பெற்றன.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் வடமாகாணத்திற்கு உட்பட்டு கலந்து கொண்டிருந்த கலைஞர்கள் அனைவரும் பரிசல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் வட மாகாணத்திற்க்கு உட்பட்ட கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள்,கலை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...