களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்
இலங்கைசெய்திகள்

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

Share

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

புதிய களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை, அவற்றை இலகுவாக கழற்றி விடவும் முடியாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடப்பட்ட பொருட்களின் மொத்த இழப்பு அறுபது இலட்சம் மாத்திரமே அன்றி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (19.07.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

களனி பாலம் தொடர்பான சர்ச்சை முற்றிலும் பொய்யானது: பந்துல குணவர்தன விளக்கம் | Bandula Kunawardana About New New Kelani Bridge

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் நஷ்டம் இல்லை
மேலும் தெரிவிக்கையில், களனி பாலத்தின் ஆணிகள் கழற்றப்பட்தாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது.

பாலத்தின் மேல்தளத்தில் பிவிசி குழாய்கள், தகவல் அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்கள், பாலத்தில் கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் ஆகியனவே திருடப்பட்டுள்ளன.

பீவிசி குழாய்கள் திருடப்பட்டதால் 40 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டி உதிரிபாகங்கள் திருடப்பட்டதால் 0.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டதால் 10 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு அறுபது இலட்சம்.

புதிய களனி பாலத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆணிகள் அகற்றப்படவில்லை. அவற்றை இலகுவாக கழற்ற முடியாது.

ஆணிகளை அகற்ற பொறியியல் நிறுவனம் சிறப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பாலம் ஆபத்தில் இருக்கும். இது வெறும் ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...