இலங்கைசெய்திகள்

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share
tamilni 251 scaled
Share

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கலுக்கான காலக்கெடுவை வழங்கிய ஜனாதிபதி, அது நடைமுறைப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் ஈட்டும் முறையை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கமரூனின் கீழ் இந்த விடயத்தில் பணியாற்றிய அமைச்சர் Francis Maude, இத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளைப் பெற இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் காணப்படும் புதிய போக்குகளை அவதானித்து தேவையான அமைப்பை அரசாங்கம் தயார் செய்ய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கணக்காய்வு சட்டத்தில் புதிய சட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...