அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்
சந்தைகளில் தேங்காய் மிக அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விபனை செய்யப்படுகின்றது.
Leave a comment