பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி
இலங்கைசெய்திகள்

பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி

Share

பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி

எமது நாட்டில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் இருந்தே தீரும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘நாட்டில் துப்பாக்கிச்சூடுகள், கொலைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”உயர் பொலிஸ் அதிகாரியுடன் இது பற்றி பேசினேன். கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களை கட்டுப்படுத்துவதிலேயே பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

இதனால் பாதாள குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை சேகரிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இப்போது நாட்டில் அந்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிலைமை இல்லை. இதனால் பாதாளக் குழுக்களை அடக்குவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார்.

அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் போதைப்பொருள் வர்த்தகம் செய்யவோ பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாது என்பது சர்வதேசமே ஏற்றுக்கொண்ட உண்மை.

அதேபோன்று, எமது நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் – உதவிகள் இருந்தே தீரும்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...