ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

Share

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அலுவலகத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,044 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 5,457 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்கான அடிப்படை மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், சில ஒதுக்கீடுகள் 25% இலிருந்து 760% வரை பாரிய தொகையால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வருடாந்த மதிப்பீடுகளை தயாரிப்பதில் உரிய கணக்கியல் உத்தியோகத்தர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெருமளவான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...