ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

Share

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அலுவலகத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,044 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 5,457 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்கான அடிப்படை மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், சில ஒதுக்கீடுகள் 25% இலிருந்து 760% வரை பாரிய தொகையால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வருடாந்த மதிப்பீடுகளை தயாரிப்பதில் உரிய கணக்கியல் உத்தியோகத்தர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெருமளவான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...