ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

Share

ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (02.07.2023) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்கள் தமது உடைமைகளை இழக்கின்றனர். இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

நாட்டின் பொருளாதார சிக்கலினால் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி பல்வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

இப்போது ஏனைய பகுதிகளையும் விற்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் அரசாங்கம் எதைப் பற்றி கனவு காண்கிறது? இதன் இலக்கு என்ன?

முத்துராஜவலை முழுவதையும் அழித்து, வெளியாட்களுக்கு விற்று, பணம் சம்பாதித்து, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாக வாழுகின்றார்கள்.

ஆனால், நாட்டு மக்களுக்கு எஞ்சியிருப்பது துன்பம் மட்டுமே. இதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது என பேராயர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...