இணைய வழியில் மோசடி - பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!
இலங்கைசெய்திகள்

இணைய வழியில் மோசடி – பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!

Share

இணைய வழியில் மோசடி – பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!

மோசடி! போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் செயற்படும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம் ஒன்றில் உந்துருளி ஒன்று விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த உந்துருளியின் விலை 125,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் குறித்த இளைஞன் தொடர்பு கொண்ட போது , உந்துருளிக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , உந்துருளியை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக விளம்பரம் செய்தவர் உரையாடியுள்ளார்.

அதை நம்பிய இளைஞன் மொத்த தொகையையும் வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உந்துருளியின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.

அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , குறித்த விலாசம் போலியானது என தெரிய வந்துள்ளது. அதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...