இணைய வழியில் மோசடி - பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!
இலங்கைசெய்திகள்

இணைய வழியில் மோசடி – பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!

Share

இணைய வழியில் மோசடி – பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!

மோசடி! போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் செயற்படும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம் ஒன்றில் உந்துருளி ஒன்று விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த உந்துருளியின் விலை 125,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் குறித்த இளைஞன் தொடர்பு கொண்ட போது , உந்துருளிக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , உந்துருளியை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக விளம்பரம் செய்தவர் உரையாடியுள்ளார்.

அதை நம்பிய இளைஞன் மொத்த தொகையையும் வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உந்துருளியின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.

அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , குறித்த விலாசம் போலியானது என தெரிய வந்துள்ளது. அதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...