Untitled 1 25 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் குறைகிறது எரிவாயுவின் விலை!

Share

இலங்கையில் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ச்சியாக விலை குறைக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இம்முறை விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற விபரத்தை இப்போதே குறிப்பிட முடியாது என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இம்மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியிருந்தது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயுவின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 598 ரூபாவாகவும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...