Untitled 1 5 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைவர்கள்!

Share

தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் கூறிய கருத்து வீதம் உண்மையானது.

தமிழ் எம்.பிக்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில்தான் அந்தத் தகவல்களை லண்டனில் ஜனாதிபதி கூறினார்.

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக இதனை மறுக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள். இது தமிழ் மக்களுக்கும் தெரியும்.” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் விஜயத்தில், கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பரை சந்தித்த போது தமிழ் மக்களின் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தனர்.

மேலும், ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
செய்திகள்இலங்கைஏனையவைபிராந்தியம்

பாகுபாடுகளை ஒழிக்க அரசாங்கம் உறுதி! – மன்னாரில் பெண் தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ஹரிணி!

இனவாதம் உட்பட அனைத்து வகையான சமூகப் பாகுபாடுகளையும் ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர்...

Illegal Weapons 1 724694 850x460 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிரடி: இந்த ஆண்டில் இதுவரை 352 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்! – காவல்துறை தகவல்!

இலங்கையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின்...

Untitled
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே படுகொலை! – நாட்டின் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின்...

fbe3c1ad sltb 850x460 acf cropped
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபையில் நாளை முதல் பதவி உயர்வு! – 350-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடங்கும் அபாயம்!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தனது ஊழியர்களின் தகுதிகளை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு முறையான உத்தியோகபூர்வ...