download 1 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சரீரப் பிணையில் விடுவிப்பு!

Share

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 667d8517696f8 md
உலகம்செய்திகள்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு: ஐந்தில் ஒரு கனடியர் நிதி நெருக்கடியில் – நானோஸ் ஆய்வறிக்கை!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்களில் ஐந்தில் ஒருவர்...

25 67c591bd8956f
இலங்கைசெய்திகள்

கேபிள் கார் திட்டம்: தேவையற்ற தலையீடுகளைத் தடுக்க கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை கட்டளை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும்...

james watson 2
செய்திகள்உலகம்

டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

டிஎன்ஏவின் (DNA) அமைப்பைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ்...

8b112170 d678 11ef 94cb 5f844ceb9e30.jpg
செய்திகள்உலகம்

காசாவில் பணயக் கைதியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் பகீர் தகவல்!

காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப்...