K6O2PbyYd8VDbaZPegPt 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் மனநோயாளிகள்!

Share

இலங்கையில் மனநோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத் சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் மனநோயாளிகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்தும் சிறப்பு ஆய்வு நடத்தினோம். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என்பது எமக்கு தெளிவாகியது.

இது மிகவும் பிரச்சனைக்குரிய நிலையாகும். ஒரு நாட்டில் முடிவெடுக்கும் நபர்கள் சரியான மன ஒருமைப்பாடு இல்லாமல் செயல்படும்போது, நாடும் மக்களும் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

மன நெருக்கடிகள் அதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றதாகவும் அவர் கூறினார். அதேவேளை தாங்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

என்வே பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிற்சைகளை வழங்கி தேவையான ஆலோசனைகளை முறையாகப் பெறுவது மிகவும் முக்கியம் என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...