BHooIZvcln0O8JUWvqnw
இலங்கைசெய்திகள்

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை!

Share

இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஆகிய மூன்று அவசர வேலைத்திட்டங்களாகும்.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கை மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வடக்கில் மூன்று பகுதிகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை விரைவில் விரைவில் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கசந்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளை விரைவில் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...