download 10 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தர் சிலைக்கு அடியில் சிசு மீட்பு!

Share

வத்தேகம அல்கடுவ வீதியில் மலியதேவ குகைக் கோவிலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைக்கு அடியில் குழந்தை கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசிகள் குழுவொன்று அதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் குழந்தையை பிரசவித்த தாய் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க வத்தேகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை குழந்தையை அந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...

21 4
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் முற்பகை காரணமாக இளைஞன் வெட்டிப் படுகொலை! – நீதவான் உத்தரவு

கிளிநொச்சி, அக்கராயன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில், இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை...