அரசியல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்உழைப்பாளர் தின நிகழ்வுகள்!

Published

on

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்உழைப்பாளர் தின நிகழ்வுகள்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நேற்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நா.பார்த்திபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version