Bandula Gunawardane
இலங்கைசெய்திகள்

நிதி கிடைக்காவிட்டால் நாடு முடங்கும்!!

Share

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து  இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும்  நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

களுத்துறை விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், குறிப்பாக 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகத்திடமிருந்து இலங்கை கடன்பெறத் தொடங்கியதாகத் தெரிவித்த அவர், பணத்தை மீள செலுத்த முடியாத நிலையில் பணம் அச்சிடப்பட்டது என்றார்.

இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது என்றும் ஜனாதிபதியொருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது அரசியல்வாதி ஒருவரோ இதற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த கடன் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த அவர், அதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் இருந்து 20 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...