இலங்கை

போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது

Published

on

“டிஸ்கோ” என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரான்சில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ரூபன்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று (29) கொழும்பு 15, டெம்பிள் வீதி, மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version