இலங்கைக்கு அவகாசம்!

image f18d1ef75a

பாரிஸ் கிளப் கடன் வழங்கும் நாடுகள், இலங்கையின் கடனுக்கு 10 வருட கால அவகாசத்தை முன்மொழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடன் அவகாசக் காலத்துக்கு மேலதிகமாக இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு சூத்திரமாக பாரிஸ் கிளப் மேலும் 15 வருட கடன் மறுசீரமைப்பை முன்மொழிந்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கலந்துரையாடல்களை தற்போது நடாத்தும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் நடவடிக்கையில் இந்த முன்மொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Exit mobile version