இலங்கை

வீடு உடைத்து கொள்ளை! – கோண்டாவிலில் ஒருவர் கைது

Published

on

யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் வீடு ஒன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் நேற்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த நபரை உரும்பிராய் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 2, 1/2 தங்கப் பவுண் சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 25 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் வீட்டில் வசிப்பவரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version