குழந்தையை கண்டுபிடித்து மீட்க உதவுங்கள்!!

Facebook 1667905077239 e1667924997732

ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கை சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி என்ற வாய் பேச முடியாத இளம் பெண் சுருவிலை சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து அதன் மூலம் பிறந்த குழந்தையே மதுமிதா (வயது 04).

கணவனை பிரிந்து இருந்த நிறோஜினி ஒரு மாதத்திற்கு முன்னரே கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் தற்போது மரணமடைந்திருப்பதாகவும் அவரது குழந்தை கொடும் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் படங்களும் காணொளிகளும் வெளியாகி உள்ளன.

ஆனால், இவை எங்கே எப்போது இடம்பெற்றன என்ற விபரங்கள் தெரியவரவில்லை.

இது தொடர்பாக இன்று (08) பகல் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை நீதிவானின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ கிராம சேவையாளர்களுக்கோ தகவல்களைக் கொடுத்து இக்குழந்தையை மீட்க உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version