வீடொன்றிலிருந்து 240 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

be50c2b4 48581c5d

பேருவளை – அம்பேபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8.34 கிலோகிராம் ஹெரோயினை இன்று காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சுமார் 240 மில்லியன் ஆகும்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version