அரசியல்

மார்ச்சில் தேர்தல்!

Published

on

” 2023 மார்ச் மாதம் கட்டாயம் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது. எதிர்வரும் மார்ச் மாதத்துடன் அந்த காலப்பகுதி நிறைவடைகின்றது.

எனவே, மார்ச் மாதத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் நடைபெற்றாலும் பரவாயில்லை. அப்போதுதான் மக்களின் ஆணை யாருக்குள்ளது என்பது தெரியவரும்.” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version