இலங்கை

ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியில் வீழ்ச்சி!

Published

on

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்குறுதியளித்தமைக்கு அமைய, பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய வரிக் குறைப்புகளைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக்குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பவுண்டின் மதிப்பு கடுமையாகக் குறைந்துள்ளது.

அதற்கமைய ஆசிய சந்தையில் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டின் விலை 1.038 டொலர்களாக காணப்பட்டதுடன், அதன் பெறுமதி 4 சதவீத்தால் சரிந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்துக்கு அமைய 401.58 ரூபாயாக காணப்பட்ட ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை இன்றையதினம் 376.70 ரூபாயாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், வெள்ளிக்கிழமையன்று 417.39 ரூபாயாக காணப்பட்ட விற்பனை விலையும் 391.95 ரூபா என்ற அளவுக்கு இன்றையதினம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version