நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் 20 ஆம் திகதி தீர்ந்துவிடும் என்பதால், முறையான ரெண்டர் நடைமுறைக்கு புறம்பாக உடனடி கொள்முதல் மூலம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் தேவைப்படும் 95 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வழங்க முடியாது எனவும், அதற்காக ஒரு டொலரைக் கூட வழங்க முடியாது எனவும் மத்திய வங்கி தெரிவித்தது. அதற்கமைவாக மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கட்டம் கட்டமாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உடனடி கொள்முதலின் கீழ் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தயாராக உள்ள நான்கு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
#srilankanews
1 Comment