pandi 66 650x371 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் – காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் கடிதம்!

Share

வடிவேலு உள்பட பல பிரபல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிளாக் பாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானார்.

இவர் நடிகராக மட்டுமின்றி இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பொருளாதார சிக்கலால் தத்தளித்து வரும் இலங்கைக்கும் அங்கு உள்ள தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதம் எழுதினார்

இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களிடம் இருந்து பொருட்களை சேகரித்து எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணியை சிறக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் செயலால் இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மனிதாபிமான உதவி பொருட்கள் எமது கப்பல் சேவை மூலம் கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன்.

எனவே நம்பிக்கையுடன் உங்கள் பணியைத் தொடங்கலாம். ஈழத்தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கை அரசு சார்பாகவும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...