இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் பெண்ணைக் கடத்திப் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது!

arrested 1
Share

குடும்பப் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்காகத் தடுத்து வைத்திருந்த நான்கு பேரை வவுனியா – பூவரசங்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் குடும்பப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவரது மகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 இலட்சம் ரூபா பணம் தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று முறைப்பாட்டாளரிடம் கடத்தல்காரர்களுக்குப் பணம் வழங்குமாறு கூறி சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...