அரசியல்

தேர்தலில் போட்டியிடமாட்டேன்! – ஜனாதிபதி

Published

on

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.

தோல்வி அடைந்த ஜனாதிபதியாக தான் வெளியேற தயாரில்லை எனவும், ஐந்தாண்டுகள்வரை பதவியில் நீடிக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர், பதவி விலக தயாரில்லை என்ற அறிவிப்பையே அவர் விடுத்துள்ளார்.

ஜனாதபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 50 நாட்களுக்கு மேலாக தன்னெழுச்சி போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version