இலங்கை

சுப்பர்மடத்தில் கோஷ்டி மோதல்! – ஐவர் வைத்தியசாலையில்

Published

on

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது எனவும், இதில் வாள், கொட்டன்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டடியைச் சேர்ந்த சிறிமுருகன் சிறிகஜன் (வயது – 23), வியாபாரிமூலையைச் சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது – 30), சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது – 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39), தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது – 41) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version