இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுப்பர்மடத்தில் கோஷ்டி மோதல்! – ஐவர் வைத்தியசாலையில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 1
Share

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது எனவும், இதில் வாள், கொட்டன்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டடியைச் சேர்ந்த சிறிமுருகன் சிறிகஜன் (வயது – 23), வியாபாரிமூலையைச் சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது – 30), சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது – 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39), தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது – 41) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...