அரசியல்

அத்துகோரள எம்.பி. கொலை தொடர்பில் நால்வர் கைது!

Published

on

நிட்டம்புவையில் கடந்த 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version