ranil pm
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களைக் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல! – ரணில் உறுதி

Share

“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களைக் காப்பாற்றவே நான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ராஜபக்சக்களைக் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல என்பதை குறித்த எம்.பிக்களிடம் கூறிவைக்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“பாரிய பொருளாதார நெருக்கடிகளால் நாட்டு மக்கள் மூன்று வேளைகளிலும் உணவை உட்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வயிற்றுப் பசிக்கு உடனடியாகத் தீர்வு காண்பதே எனது குறிக்கோள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன். அதற்காக அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நான் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கைக்கு வெளிநாடுகள் உதவ முன்வந்துள்ளன. எனவே, பொருளாதார நெருக்கடிக்கு நாம் விரைந்து தீர்வுகாண முடியும். துயரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

உண்மையான மக்கள் பிரதிநிதிகள் எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...