3 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அச்சத்தாலேயே மஹிந்தர் திருமலை முகாமில் தஞ்சம்! – கமால் தகவல்

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது உண்மைதான் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்ததால் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்தே மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...