3 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அச்சத்தாலேயே மஹிந்தர் திருமலை முகாமில் தஞ்சம்! – கமால் தகவல்

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது உண்மைதான் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்ததால் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்தே மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...