வெட்டிப் படுகொலை 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கத்திக் குத்தில் ஒருவர் சாவு! – சந்தேகநபர் தப்பியோட்டம்

Share

கத்திக் குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொஸ்லாந்தை, மக்கள்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெதுப்பகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர் ஒருவர் குறித்த நபரைக் கத்தியால் குத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 14
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜப்பானிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில், குறிப்பாக ஜப்பானிய சந்தையில் வலுப்படுத்தும் நோக்கில், 11 பேர் கொண்ட...

04 13
உலகம்செய்திகள்

ஈரானின் கர்க் தீவில் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்: எரிசக்தி நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவில் (Kharg Island) இருந்த இராணுவ...

03 14
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் செபாஸ்டியன் மார்செட் பொலிவியாவில் கைது!

தென் அமெரிக்காவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவரான உருகுவேயைச் சேர்ந்த செபாஸ்டியன் மார்செட்...

02 13
விளையாட்டுசெய்திகள்

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமான முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஐபிஎல் 2026 தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில்...