mahinda e1649687958337
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசிலும் நானே பிரதமர்! – டலஸுக்கு மஹிந்த பதிலடி

Share

இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள குரல் பதிவில்,

“அரசைப் பொறுப்பேற்க யாரும் முன்வராதபோது, யாரை பிரதமராக நியமிப்பது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இடைக்கால அரசிலும் நானே பிரதமர். வரலாறு தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களே என்னைப் பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொல்கின்றனர்.

இதனைவிட நெருக்கடியான சூழ்நிலைகளை இலங்கை சந்தித்திருக்கின்றது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் சக்தி அரசுக்கு இருக்கின்றது.

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பேச்சுக்கு நான் அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
screenshot 1767577499228 664x430 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக ஊடகங்களில் பரவும் பொலிஸ் வெளியீடு ஒரு போலிச் செய்தி: பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் அவசர எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதாகக் கூறி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்கள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு...

image 870x580 695fced3e49ec
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு காணி விடுவிப்பு மற்றும் ஒலுவில் துறைமுகம் குறித்து முக்கிய முடிவுகள்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Weather 1
செய்திகள்இலங்கை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: நாளை மாலை இலங்கை கடற்கரையைக் கடக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை...

images 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவனெல்லை கோர விபத்து: லொறியின் பிரேக் செயலிழந்ததே காரணம்! நேரடி சாட்சியம்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில்...