mahinda e1649687958337
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசிலும் நானே பிரதமர்! – டலஸுக்கு மஹிந்த பதிலடி

Share

இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள குரல் பதிவில்,

“அரசைப் பொறுப்பேற்க யாரும் முன்வராதபோது, யாரை பிரதமராக நியமிப்பது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இடைக்கால அரசிலும் நானே பிரதமர். வரலாறு தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களே என்னைப் பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொல்கின்றனர்.

இதனைவிட நெருக்கடியான சூழ்நிலைகளை இலங்கை சந்தித்திருக்கின்றது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் சக்தி அரசுக்கு இருக்கின்றது.

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பேச்சுக்கு நான் அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...