1 22 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மானிப்பாய் பிரதேச சபையில் கோட்டாவின் உருவப் பொம்மை எரிப்பு!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப் பொம்மை சபை முன்பாகத் தீட்டியிட்டுக் கொளுத்தப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்று தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொள்வதற்கு வந்த சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உருவப் பொம்மையை இழுத்து வந்து சபை முன்றலில் தீயிட்டுக் கொளுத்தினர்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சபை உறுப்பினர் ஒருவர் சிலுவை தாங்கி சபைக்கு வந்தார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் நாடு அரை அம்மணமாக உள்ளதாகத் தெரிவித்து , தானும் அரைகுறையான ஆடை அணிந்து வந்து சபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்டார்.

IMG 20220422 WA0089 IMG 20220422 WA0092 IMG 20220422 WA0090

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...