கோட்டா நாமல்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா மௌனம் கலைய வேண்டும்! – நாமல் வலியுறுத்து

Share

மக்கள் ஏன் அரசின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்குப் புரிகின்றது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி., ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மௌனம் கலைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இருப்பினும், இப்போது கோபத்துக்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதியும் அரசும் நாட்டுக்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

அத்தோடு, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும், ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றது. அது நெருக்கடியை மேலும் உருவாக்கக்கூடும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...