namal 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசைக் கவிழ்க்கவே முடியாது! – நாமல் திட்டவட்டம்

Share

“மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

ஜனாதிபதியையும் அரசையும் வீட்டுக்குச் செல்லுமாறு கோரும் எதிர்க்கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஏன் மௌனம் காக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லை எனவும், அவர்கள் அரசுக்கு எதிராகப் பொங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசால்தான் தீர்வு காணமுடியும் எனவும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டணியுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...