இலங்கைசெய்திகள்

ஈழ அகதிகள் 16 பேரையும் மண்டபம் முகாமில் பராமரிக்க நடவடிக்கை!

277162507 4875332815888383 5907585807282037045 n
Share

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த 16 பேரையும் மண்டபம் அகதி முகாமில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் இருந்து 22ஆம் திகதி ஒரே நாளில் 16 பேர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மன்னாரைச் 6 பேர் இன்று காலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இன்று மாலை தமிழ் நாடு அரசின் சிபார்சுக்கமைய ஈழத்தில் இருந்து வருபவர்களை நீதிமன்றில் நிறுத்தாது நேரடியாக மண்டபம் அகதி முகாமுக்குக் கொண்டு சென்று தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய வவுனியாவைச் சேர்ந்த 10 பேரும் இன்று மாலை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...