இளைஞர் சாவு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் அதீத ஹெரோயின் போதையால் இளைஞர் சாவு!

Share

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞர், போதைப்பொருளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அடிமையாக இருந்து வந்துள்ளார். அதனால் அவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுக் காலையில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டுவிட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சைப் பொத்தியவாறு நிலத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்பு அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டமையால் ஏற்பட்டது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்தநிலையில், இரு வாரங்களில் இரு இளைஞர்கள் யாழில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற...

25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...