fish 1
இலங்கைசெய்திகள்

யாழ்.மாவட்டத்தில் கொடுவா மீன் வளர்ப்பு

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்பு தொழில் முயற்சியை மேற்கொள்ள தலா 25 லட்சம் ரூபா முதலீட்டு உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயனாளிகளுக்கு மீன்வளர்ப்பு பயிற்சி வழங்குதல், விற்பனை செய்யும் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...