88 300x200 1
இலங்கைசெய்திகள்

பண்டாரநாயக்காவுக்கு ஒரு சட்டம் திலீபனுக்கு ஒரு சட்டமா?

Share

தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமீறல். ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார நடைமுறையா?

இதுதான் அரசின் இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடா? அனைவரும் ஒற்றுமையாக தேசத்தை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ஐ.நாவின் உரையில் ஒற்றுமை வெளிப்படுகின்றதா? இதுதான் அரசின் இனரீதியான அணுகுமுறையா?

இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 34வது தினம் கடைப்பிடிக்க அவரின் சிலைக்கு அண்மையில்கூட செல்ல முடியாது தடுக்கப்பட்டோம்.

அஞ்சலி செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினார் எனும் குற்றச்சாட்டில் காட்டுமிராண்டித்தனமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் இராணுவத்தினரும் பொலிஸார் நினைவுகூர்தலுக்கு தடைகளை ஏற்படுத்தினர்.

ஆனால் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவுதினம் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர் எனப் பெருமளவானோரின் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலி நடைபெற்றுள்ளது.

அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை அஞ்சலிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழர்களின் நினைகூரலை மாத்திரம் தடுக்கின்றது என்பதே எமது பிரச்சினை.

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்குப் பிடிக்காத விடயங்களுக்கு அரசு பயன்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

88

6666

தொடர்புடைய செய்தி:

பண்டாரநாயக்கவின் நினைவு தினம் இன்று!

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...