kajen
இலங்கைசெய்திகள்

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

Share

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நேற்று சென்ற காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகளுக்கு இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிட சென்ற தமிழ் எம்.பிக்களுக்கு சிறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்போம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ளவர்களின் நலன்களை பார்வையிட சட்டத்தரணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எங்களை அனுமதிக்கச் சொல்லி வேண்டினோம்.

ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...