savendra
இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி

Share

பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டை முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கின்றோம் – இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களும் டெல்டா தொற்றாளர்களும் அதிகரித்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சாவு எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது. ஆனால், நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்துகொள்கின்றோம் என்று மக்கள் கூறுவதனாலேயே நாட்டை முடக்காது வைத்திருக்கின்றோம்.

எனினும் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறி வருகின்றனர். ஆனால், மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும். சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...