tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

Share

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

12 வருடங்களுக்கு முன் மீன்பிடி படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்களை கொன்ற வழக்கில் 7 கடற்றொழிலாளர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (24.12.2024) ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த (15.10.2012) அன்று இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்கள் மற்றும் பல கடற்றொழிலாளர்களை குறித்த 7 கடற்றொழிலாளர்கள் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளனர்.

மேலும் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்களில் மூவர் வழக்கு விசாரணையின் போது இறந்ததால், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த சந்தேகநபரை விடுதலை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீதமிருந்த ஏழு குற்றவாளிகளும் இந்த தண்டனையை விதித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...