tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

Share

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

12 வருடங்களுக்கு முன் மீன்பிடி படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்களை கொன்ற வழக்கில் 7 கடற்றொழிலாளர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (24.12.2024) ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த (15.10.2012) அன்று இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்கள் மற்றும் பல கடற்றொழிலாளர்களை குறித்த 7 கடற்றொழிலாளர்கள் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளனர்.

மேலும் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்களில் மூவர் வழக்கு விசாரணையின் போது இறந்ததால், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த சந்தேகநபரை விடுதலை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீதமிருந்த ஏழு குற்றவாளிகளும் இந்த தண்டனையை விதித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...